சபரிமலை - தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு

Source: Raj
கேரளா மாநிலத்தில், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக்கு அய்யப்பன் கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். கேரளவில் பல்வேறு நகரங்களில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து, பெண்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுவது தொடர்பாக பந்தளம் அரச குடும்பம் மற்றும் தேவசம் போர்டு இடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் கேரளாவில் பரபரப்பும், குழப்பமும் நிலவுகிறது.
Share



