மேகதாதுவில் அணை - தமிழகத்தில் பதட்டம்

Source: Raj
மேகதாதுவில் அணை கட்ட போவதாக கர்நாடக மாநிலம் அறிவித்துள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது விவகாரம் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களிடையே மீண்டும் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியுள்ளது. மேகதாதுவில் அணை கட்டிவிட்டால் தமிழக டெல்டா மாவட்டங்களின் நிலை கேள்வி குறியாகிவிடும் என்று தமிழகத்தை சேர்ந்த விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. இது மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது. மேலதிக விவரங்களை எடுத்து வருகிறார் எமது தமிழக நிருபர் ராஜ்.
Share



