இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தலின் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம், புதுச்சேரி உட்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் நேற்று 38 நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் 72% சதவீதம் ஓட்டுகள் பதிவானது. மேலும் தமிழக சட்டசபையில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
Share




