இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தபால் ஊழியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ் உட்பட மாநில மொழிகளில் புதிதாக தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் எழுந்த ஒட்டுமொத்த எதிர்ப்பால் இந்த தேர்வை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. அஞ்சல் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று நேற்று மாநிலங்களவையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர் . இதனால் அவை நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ் உள்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்தார். மேலும் கடந்த ஜூலை 14 ஆம் தேதி நடந்த அஞ்சல் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகும் ரவிசங்கர் தெரிவித்தார்.
Share




