தமிழக பாஜக மாநில முன்னாள் நிர்வாகி கே.டி.ராகவன் குறித்த சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பின்னணியில் இது குறித்து கருத்து வெளியிட்ட நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் "இந்த உலகத்திலேயே நடக்காத ஒன்றையா ராகவன் செய்துவிட்டார்? வீடியோ வெளியிட்டவரை தான் கைது செய்ய வேண்டும்" என்று கூறினார். இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




