விநாயக சதூர்தியும் சர்ச்சைகளும்

Source: Raj
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 13-ந்தேதி விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் கொண்டாட்டமாக இருந்த விநாயகர் ஊர்வலங்கள் தற்போது பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. சிறிய அளவில் நடைபெற்று வந்த ஊர்வலங்கள் தற்போது ரத யாத்திரை போல் மாறி வருகின்றன. மேலும் விநாயகர் ஊர்வலத்தில் அரசியல் புகுந்துள்ளது என்று சிலர் விமர்சிக்கின்றனர் என்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



