கருணாஸ் கைது! பின்னணியும் பிற கேள்விகளும்

Source: Raj
தமிழக சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கருணாஸ் தமிழக முதல்வர் தன்னைக் கண்டு அஞ்சுவதாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி அந்த கூட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளான கருத்துக்களைத் தெரிவித்தார். இது தொடர்பாக கருணாஸ் இன்று கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு இதை விட சர்ச்சையான கருத்துக்களை பேசிய பாஜவின் ஹ.ராஜா ஏன் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த செய்தி குறித்து கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



