SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து ஏன் பெண்கள் மீட்கப்பட்டனர்?

தமிழ்நாட்டின் விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி என்ற ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாவும், மேலும் அங்கு பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டதாகவும் புகார்கள் வந்ததையடுத்து அந்த ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share