ஐயப்ப அரசியல்!

Source: Raj
“சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்” என்று இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி, கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சபரிமலைக்கு நேற்று வந்த மூன்று பெண்கள், பக்தர்களின் போராட்டத்தால், திருப்பி அனுப்பப்பட்டனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமுல் படுத்த வேண்டும் என்று கேரளா மாநில அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்துவரும் அதே நேரத்தில், கேரளா மாநில பாஜகவோ, "சபரிமலைக்குள் பெண்களை விட கூடாது" என்று வலியுறித்தி வருகிறது. ஐயப்பன் கோவில் விவகாரத்தில் அரசியலும் கலந்து விட்டதால், இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது. இது குறித்து நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் விவரணம்.
Share



