தமிழ்நாட்டில் குடிநீரை புட்டிகளில் அடைத்து விற்கும் தனியார் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி தண்ணீரை உறிஞ்சி எடுப்பதாகவும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைகிறது என்று தொடரப்பட்ட ஒரு வழக்கில் நிலத்தடி நீரை எடுப்பதற்கு அரசிடமிருந்து அனுமதி பெறாத குடிநீர் ஆலைகளை மூடி ‘சீல்’ வைக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்படுவதால் பாட்டில் அல்லது கேன் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்த செய்தி குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





