சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது!

Source: Johnson
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசு அமைக்கத் திட்டமிடும் சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று முனையத்தை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்டம் முகிலன் குடியிருப்பு கடல் பகுதியில் பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கடல் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டம் மற்றும் காவேரிக்காக திரையுலகு நடத்திய போராட்டம் குறித்த செய்திகளை தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



