28 ஆண்டு சிறைவாசம் முடிவுக்கு வருமா?

Source: Raj
தமிழ்நாட்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும், தமிழக அரசின் பரிந்துரைக்கு மதிப்பளித்தும், ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்வதற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அழைப்புவிடுத்தபடி நேற்று தமிழகத்தின் சென்னை உள்பட 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இது குறித்த அதிக தகவலை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share


