Sterlite ஆலையை மூடவேண்டும் என்று கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு இந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்துவரும் அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. இதில் ரஜினிகாந்த் எதிர்வரும் செவ்வாய்கிழமை பிப்ரவரி 25-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் விசாரணை ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, நடிகர் ரஜினி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





