தமிழகத்தின் தலைநகரான சென்னையில், மக்கள் தொகை பெருக்கம் உட்பட, பல்வேறு நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், மதுரையை இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை பகுதியை சேர்ந்த அமைச்சர்கள் இந்த விவாதத்தை கிளப்ப, திருச்சி பகுதியை சேர்ந்த அமைச்சர்களோ திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





