தமிழகப் பார்வை!

Source: kodanadu
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஒரு கும்பல் புகுந்து அங்கு காவல் பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து,மற்றொரு காவலாளியை தாக்கிவிட்டு பங்களாவுக்குள் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இது தமிழகத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. காவல் துறையினர் இது குறித்து பத்து பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான ஆவணப் படத்தை தெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் நேற்று வெளியிட்டார். அப்போது இந்த கொலை கொள்ளை சம்பவங்களில் தமிழக முதலமைச்சர் எடப்பட்டி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக பகிரங்கமாக தெரிவித்தார் மேத்யூஸ் சாமுவேல். இந்த செய்தி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இது குறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.
Share



