பாஜக ஆட்சியில் கருத்துரிமை பாதிக்கப்படுகிறதா அல்லது மீறப்படுகிறதா?

Source: Raj
பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் கைதான தூத்துக்குடி மாணவி சோஃபியா ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது தமிழகத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தனி மனிதனின் கருத்துரிமை பாதிக்கப்படுகிறது என்றும், இந்த சம்பவம் பாஜகவின் பாசிச தன்மையை வெளிச்சம்போட்டு காட்டுகிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. இதே நேரம் ஜனநாயகத்தில் கருத்துக்களை தெரிவிக்க பல்வேறு வழிகள் உள்ளது என்றும் மாணவி சோஃபியாவின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் கருத்துக்கள் உலவி வருகிறது. சோஃபியாவின் கைது மற்றும் அதை தொடர்ந்த நிகழ்வுகள் என்ன? விவரிக்கிறார் நமது தமிழக செய்தியாளர்.
Share



