இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை வகுப்பதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழு மத்திய அரசிடம் புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது. மும்மொழி கொள்கை, தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பான பரிந்துரைக்க இடம்பெற்று உள்ளன. மேலும் 6-ஆம் வகுப்பு முதல் ஹிந்தி மொழியை கற்பிக்க இந்த குழு பரிந்துரைத்துள்ளது. ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் ஹிந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்று வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிக்கப்படுகிறதா என்ற பார்வையில் விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





