“நீட்” பலிவாங்கிய அனிதாவின் ஓராண்டு நினைவு!

Source: Raj
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு “நீட்” தேர்வு பலிவாங்கிய மாணவி அனிதா. மருத்துவர் கனவு அழிந்ததால் தன்னையே அழித்துக்கொண்ட அனிதா இறந்து ஓராண்டு ஆகிறது. +2 பொது தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு 1176 மதிப்பெண்கள் எடுத்த அனிதா, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. 'நீட்' தேர்வுக்கு எதிராக பலகட்ட போராட்டங்களை நடத்திய அனிதா தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்து கொண்டார். அவர் இறந்து ஓர் ஆண்டு ஆகிவிட்ட நிலையில் அவரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. காலங்கள் மாறினாலும் காயங்கள் மாறாது என்பதை நினைவு படுத்துவதாக அமைந்து இருந்தது அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர்.
Share



