திட்டமிட்டபடி நடைபெறுமா திருவாரூர் இடைத்தேர்தல்?

Source: Thiruvaarar
தமிழகத்தில் இருபது சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் ஜனவரி மாதம் 28 -ஆம் திகதி தேர்தலை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். ஒரே ஒரு தொகுதிக்கு இடை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதிமுகவும் இடை தேர்தலை சந்திக்க தயாராக இல்லை என்று கருதப்படுகிறது. திருவாரூரில் தேர்தல் நடத்தும் சூழல் உள்ளதா என்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி உள்ளது. இது குறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.
Share



