ஜீயர் பேச்சு வன்முறையைத் தூண்டுகிறதா?

Source: Raj
தமிழ்நாட்டில் ஆண்டாள் குறித்த சர்ச்சை தொடர்பாக கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என உண்ணாவிரதம் மேற்கொண்டவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர். வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதிக்கு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நேற்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பின் பொது தெரிவித்தார். மேலும் இறை நம்பிக்கைக்கு எதிராக யாராவது பேசினால் இனி அமைதியாக போகமாட்டோம் என்று கூறிய அவர் "எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும். நாங்களும் கல் எறியக்கூடியவர்கள் தான். ஆனாலும் நாங்கள் அப்படி நடக்க மாட்டோம்" என்றார். இது குறித்த விவரணம். முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



