தமிழக அரசின் 2020-21ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் சமர்பித்தார். தமிழக டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக தமிழக் அரசு அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கோயில் நிலங்கள் மீட்பு, கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம், சிறப்பு போக்ஸோ நீதிமன்றக் கட்டடம், அத்திக்கடவு - அவினாசி திட்டம் என்று பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் இருந்தாலும், இது 'தேர்தல் பீதியில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்' என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. தமிழகத்திலிருந்து நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் பார்வை இது.
Share





