கதிராமங்கலத்தில் ஏன் போராட்டம் தொடர்கிறது?
Raj Source: Raj
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.ன்.ஜி.சி எண்ணயை குழாய்களை பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த கிராமத்து மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் காட்சிகள் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கதிராமங்கலத்தில் போராடும் கிராமத்து மக்களுக்கு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் ஆதரவு தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



