Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

மறைந்தார் கலைஞர்! சோகத்தில் தமிழகம்!!

cc

Source: Raj

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மலை 6.30 மணி அளவில் காலமானார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழகத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மறைவுக்கு பிறகும், "எழுந்து வா தலைவா, எங்களுக்காக!" என்று ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் கதறி அழுதனர். திமுகவின் அச்சாணியாக திகழ்ந்த தலைவர் மட்டும் அல்லாமல் தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்து முறை வீற்றிருந்தவர். பதிமூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1957-ஆம் ஆண்டு முதல் தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை சுவைத்தவர். இந்தியாவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் திருவுடல் தற்போது ராஜாஜி மகாலில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now