மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசத்தின் நம்பிக்கையில்லா தீர்மானம்! அதிமுக என்ன செய்யும்?

Source: Raj
இந்திய நாடாளுமன்றத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஆந்திரா மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளதாக ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். மத்தியில் உள்ள மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசால் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருவதால் அதிமுக பாஜக அரசுக்கு எதிராக செயல்படவேண்டும் என்று தெரிவிக்கிறன்றனர் எதிர்க்கட்சியினர். அதிமுகவின் நிலை என்ன? விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



