இந்தியாவில் பெட்ரோல் விலை புதிய உச்சம்

Source: Raj
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அதிர வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான விலை உயர்வுக்கு பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பெட்ரோல் விலை மிகப் பெரும் அளவில் உயர்ந்திருப்பது மத்திய அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. ஆனலும் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள ஊசலாட்டமே விலை உயர்வுக்குக் காரணம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் காரணத்தை ஏற்க மறுக்கின்றன எதிர்க்கட்சிகள். ஏறி வரும் பெட்ரோல் விலை! தாக்கம் என்ன! எமது தமிழக செய்தியாளர் ராஜ் வழங்கும் செய்தி விவரணம்.
Share



