தமிழகத்தில் "மெகா" வருமானவரி துறை சோதனை

Source: Focus : TamilNadu
தமிழகத்தில் நவம்பர் 9-ஆம் தொடங்கி நேற்று வரை தமிழகம் முழுவதும் ஒரு "மெகா" வருமானவரி துறை சோதனை நடைபெற்றது. ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சுமார் 200 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் சசிகலா குடும்பத்தை சேர்ந்த பலர் கோடிக்கணக்கில் சொத்துக்களை மோசடி வழியில் சம்பாதித்து அதை முறைகேடாக மறைத்து வைத்து இருந்ததை வருமான வரி துறையினர் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்
Share



