கொடைக்கானலில் இருந்து இரோம் ஷர்மிளா வெளியேற வலியுறுத்தல்
Irom Sharmila Source: Irom Sharmila
மணிப்பூரின் இரும்பு மங்கை இரோம் ஷர்மிளா தற்போது கொடைக்கானலில் தங்கியுள்ளார். 16 ஆண்டுகள் உலகின் நீண்ட உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அவர் கடந்த ஆகஸ்ட் 9, 2016 அன்று தனது போரட்டத்தை முடித்து கொண்டார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு தோல்வியடைந்த அவர், தனது கடைசி காலங்களை தமிழகத்தில் உள்ள கொடைக்கானலில் கழிக்க முடிவு செய்தார். தற்போது பிரிட்டன் காதலர் தெஸ்மான்ட் பெலார்மைனுடன் கொடைக்கானலில் தங்கியுள்ள அவர் திருமணம் செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்துள்ளார். ஆனால் இவர்களது திருமணத்தை நிறுத்தி, இரோம் ஷர்மிளாவின் சொந்த மாநிலமான மணிப்பூருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. மணிப்பூரில் இரும்பு மங்கை இரோம் ஷர்மிளா கொடைக்கானலை விட்டு வெளியேறவேண்டும் என்று எதிர்ப்பு வலுத்துவருவதற்கு காரணம் என்ன? விவரிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share


