தமிழகப் பார்வை!

Source: SBS Tamil
தமிழகத்தில், மூன்று இடங்கள் உட்பட, நாடு முழுவதும், 55 இடங்களில், ஹைட்ரோ கார்பன் எடுக்க, வேதாந்தா நிறுவனம் மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகியவற்றுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராடி வரும் வேளையில், புதிதாக மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் காட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர்.
Share



