தமிழகப் பார்வை!

Source: SBS Tamil
சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச் சாலை விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால், சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும் என்று சில அமைப்புகளும், தங்கள் விவசாயம் பாதிக்கப்படும் என்று சில கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகம் இருப்பதால் இந்த புதிய விரைவு சாலையை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தினால் காடுகளிலுள்ள மரங்கள் அழிக்கப்படும் என்றும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று கூறி திமுக உட்பட சில அரசியல் காட்சிகள் மற்றும் சேலம் மற்றும் அதை சுற்றி உள்ள சில கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பசுமை சாலை திட்டம் பசுமையை அழிகிறதா? பசுமை சாலை குறித்து ஒரு பார்வை! முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



