ஆசியாவின் நோபல் பரிசான ரமோன் மாக்சசே விருதுகளுக்கான இந்த வருட வெற்றியாளர்களில் ஆறு பேரில் ஒருவராக, 82 வயதான தமிழ் ஆசிரியர் கெத்சீ சண்முகம் (Gethsie Shanmugam) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு ஆசிரியரான கெத்சீ சண்முகம், மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள விதவைகள், அனாதைகள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கும், மோதல் வலயங்களில் குண்டு வெடிப்புகளினாலும், அச்சுறுத்தல்ககளினாலும் பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கிவருகிறார். கெத்சீ சண்முகம் தனது செயற்பாடுகள் குறித்தும், விருது வாங்கியது குறித்தும், குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார்.