அகதிகள் குறித்த ஆஸ்திரேலியாவின் கொள்கைகள், அகதிகள் மற்றும் புகலிடம் கோருபவர் குறித்த விவாதம் - ஆஸ்திரேலிய சமுதாயத்தின் மிகவும் சிக்கலான, மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் விடயமாக உருவெடுத்துள்ளது. தமது சொந்த நாட்டை விட்டுப் புகலிடம் கோரி மக்கள் ஏன் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு வருகிறார்கள் என்பதை எடுத்துக்காட்ட, “வந்த இடத்திற்கே திரும்பிப் போ” என்ற பொருள்பட “Go Back to Where You Came From” என்ற தலைப்பில் ஒரு தொலைக்காட்சித் தொடரை ஒளிபரப்புகிறது. இது குறித்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியை, இலங்கையிலிருந்து புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்துள்ள அமுதன் மற்றும் கலா ஆகியோருடைய கதைகளோடு எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.