திருடப்பட்ட தலைமுறையினரிடம் அப்போதைய பிரதமர் Kevin Rudd மன்னிப்புக் கேட்டு 12 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆகின்றன. அப்படி திருடப்பட்ட தலைமுறையை சேர்ந்த சிலர் தமது கதைகளை மற்றவர்களும் அறியச் செய்ய ஒரு பேரூந்தில் புறப்பட்டிருக்கிறார்கள்.
பூர்வீக மக்களுக்கும் மற்றவர்களுக்குமிடையிலான இடைவெளியைக் குறைப்பதென்று அப்போதைய அரசு உறுதியளித்திருந்தாலும் அது முற்றாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, இது குறித்த அணுகுமுறையை மாற்றப் போவதாக தற்போதைய அரசு உறுதியளித்துள்ளது. ஏழு இலக்குகளில் இரண்டு இலக்குகளில் மட்டுமே அரசு பூரணமாக செயல்பட்டிருக்கிறது என்று அண்மையில் வெளியான அறிக்கையின் முடிவுகள் சொல்கின்றன.
இவை குறித்து Naveen Razik மற்றும் Biwa Kwan எழுதிய விவரணங்களின் அடிப்படையில் தமிழில் ஒரு விவரணத்தைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.





