COVID-19 தொற்றுநோய் ஆரம்பமாகி ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. பலர் தங்கள் வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட, ஒன்று இரண்டல்ல பல தனிநபர் கடன்களை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகரிக்கும் கடன்களின் திருகுச்சுழற்சியில் அவர்கள் சிக்கியுள்ளார்கள்.
தலை மேல் கடன் பட்டுவிட்டவர்களுக்கு இலவச மற்றும் இரகசிய நிதி ஆலோசனை சேவைகள் உள்ளன. அவர்கள் நிலைமையை மதிப்பிட்டு, கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் திட்டம் ஒன்றை உங்களுக்கு வடிவமைத்து உதவுவார்கள்.
இது குறித்து எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share




