பாரதி கிருஷ்ணகுமார் ஒரு அறியப்பெற்ற தமிழ் ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர், மற்றும் பேச்சாளர். சமூகத்தில் நடந்த வன்முறைகளை, சமூகச் சிக்கல்களை இவர் தனது ஆவண நிகழ்படங்களில் பதிவு செய்துள்ளார். தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் வருடாந்த இனிய இலக்கிய சந்திப்பு இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 26ம் நாள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், பாரதி கிருஷ்ணகுமார், "யாமறிந்த புலவரிலே" எனும் தலைப்பில் தமிழுரை ஆற்றவிருக்கிறார். பாரதி கிருஷ்ணகுமாரை தொலைபேசி வழியாக நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.