“தோல்விப் படங்களையே நான் முதலில் பார்ப்பேன். ஏனெனில்...”

Source: Raj
தமிழ் சினிமாவின் பிதாமகன் என்று அழைக்குமளவு மிகவும் முக்கியமான படைப்பாளி இயக்குனர் மகேந்திரன் அவர்கள். தமிழ் திரைப்படத்தை கலையம்சம் கொண்டதாக மாற்றியமைத்த பெருமை மகேந்திரனுக்கு மட்டுமே உரியது. “முள்ளும் மலரும்”, “உதிரிப்பூக்கள்” போன்ற திரைப்படங்கள் தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த திரைப்படங்களாக இன்றும் கொண்டாடப்படுகின்றன. தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். இன்னும் எத்தனையோ இயக்குனர்கள் வருவார்கள். ஆனால், இத்தனை நீண்ட பட்டியலில், ஒரு சில இயக்குனர்களுக்கு மட்டுமே நிரந்தர இடமுண்டு. யாராலும் அவர்களின் இடத்தை நிரப்ப இயலாது. அப்படியானவர் இயக்குனர் மகேந்திரன் அவர்கள். இயக்குனர் மகேந்திரன் அவர்கள் 2006 ஆம் ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்முகத்தின் மூன்றாம் பகுதி. நேர்முகம் கண்டவர்: றைசெல்.
Share



