SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கவிதையே எனக்கு எப்போதும் பிடித்த வடிவமாக உள்ளது – ஆழியாள்

Source: Azhiyal
“நெடுமரங்களாய் வாழ்தல்” எனும் கவிதை தொகுப்புக்கு (அணங்கு பெண்ணியப் பதிப்பகம் - Dec 2020) கனடா நாட்டின் தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு வழங்கும் பெருமைமிகு கவிதை விருதை பெறுகிறார் கான்பெரா நகரில் வாழும் ஆழியாள் அவர்கள். தமிழ் இலக்கியப்படைப்பாளிகளில், குறிப்பாக கவிதை படைப்பவர்களில் முக்கிய ஆளுமையாக வலம் வரும் மதுபாஷினி எனும் இயற்பெயர்கொண்ட ஆழியாள் அவர்களை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.
Share



