தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் கூட்டப்புளியைச் சேர்ந்த 70 வயதான பாதிரியார் லியோ ஜெயசீலன் என்பவர் காயம் அடைந்தார். முதலில் வந்த செய்திகளின் அடிப்படையில் அவர் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துவிட்டதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால், அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து குலசேகரம் சஞ்சயன் கேட்டறிந்து கொள்கிறார்.