மெல்பன் நகரம் தொடர்ந்து பல நாட்களாக முடக்க நிலையில் இருந்துவருகிறது. அந்த நகரில் வாழும் நம்மவர்கள் இந்த முடக்க நிலையை எப்படி எதிர்கொள்கின்றனர்? அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆதரிக்கின்றார்களா? இந்தியாவிலிருந்து விமானங்கள் வருவதற்கு முன்பு விதிக்கப்படட தடையை அரசு விலக்கியிருக்கக்கூடாது என்று நினைக்கின்றார்களா? - இப்படியான பல கேள்விகளோடு மெல்பன் lockdown யில் வாழும் அவர்களோடு ஒரு பரிமாற்றம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்: சுகன்யா தன்ராஜ் (மேல் இடது), ஜான் பரிசுத்தம் (மேல் வலது), ஸ்ரீகாந்த் சத்தியநாராயணன் (கீழ் இடது), காயத்ரி (கீழ் வலது). நிகழ்ச்சி தயாரிப்பு – றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




