பாரிஸ் நகரின் மிகமுக்கிய கேந்திரப்பிரதேசமான Champs Elysees பகுதியில் உலகப்பிரசித்தி வாய்ந்த வர்த்தகநிறுவனங்கள் ஒருங்கே அமைந்த பகுதியில் - Franklin D Roosevelt மெற்றோ ரயில் நிலையம் அருகே இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். ஃப்ரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் வாக்களிப்பிற்கு மூன்று தினங்கள் இருக்கும் நிலையில் நகரில் பலத்த பாதுகாப்புக்குட்பட்ட பகுதியில் இத்தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதல் ஏற்படுத்தும் தாக்கம் என்னவாக இருக்கும்? அலசுகிறார் பிரான்ஸ் நாட்டில் வாழும் உதயன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், தற்போது சுயாதீனமான ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவருமான கார்த்திகேசு குமாரதாசன் அவர்கள்.