தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை விமர்சித்து பாடல் பாடிய காரணத்திற்காக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவனை காவல்துறையினர் கைது செய்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். முன்னதாக, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை விமர்சித்த குற்றத்திற்காக இவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி மன்றத்தில் வழக்குகளை எதிர்கொண்டு இருக்கும் கோவன் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.