புகலிடம் கோருவோரை நெருக்கும் காலக் கெடு: தகவல் அரங்கம்
AAP Source: AAP
புகலிடம் கோருவோர் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதிக்குள் விண்ணப்பிக்கவில்லை என்றால் அவர்களை தாம் ஒரு போலியான புகலிடம் கோருவோர் என்று கணக்கிடுவேன் என்று குடிவரவுத்துறை அமைச்சர் Peter Dutton எச்சரித்துள்ள பின்னணியில், இது குறித்து புகலிடம் கோருவோரும், அகதிகளும் மேலும் அறிந்துகொள்ள Australian Tamil Congress மற்றும் Tamil Resource Centre அமைப்புகள் இணைந்து எதிர்வரும் ஞாயிறு தகவல் பரிமாற்றம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்ச்சி குறித்து விளக்குகிறார் முனைவர் பாலா விக்னேஸ்வரன் அவர்கள்.
Share



