வட்டிவீத உயர்வுகளால் நாட்டிலுள்ள சராசரி நபர் ஒருவர், கடந்த ஆண்டின் இதே காலபகுதியில் திரும்பிச் செலுத்திய வீட்டுக்கடனைவிடத் தற்போது நூற்றுக்கணக்கான டாலர்களை அதிகமாகத் திருப்பிச் செலுத்துகிறார். இந்நிலை மேலும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வட்டிவீத அதிகரிப்புகளால் வீடு வாங்கியோர் மற்றும் வாங்கவுள்ளோர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தொடரும் வீட்டுக்கடன் அதிகரிப்புத் தொடர்பிலான அழுத்தங்களைச் சமாளிக்கும் சில வழிமுறைகள் பற்றி விளக்குகிறார் வீட்டுக்கடன் வசதிகள் மற்றும் நிதி தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றினை சிட்னியில் நடத்திவரும் நரா நிமலன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share





