கலைமாமணி முனைவர் சேயோன் அவர்கள் ஆசிரியப் பணி ஆற்றிய பின் 33 ஆண்டுகள் அகில இந்திய வானொலியில் (All India Radio) பல்வேறு நிலைகளில் பணியாற்றி சென்னை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் இயக்குநராகப் பணி நிறைவு பெற்றவர். 37 ஆண்டுகளாக மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனச் செயலராகத் தொண்டாற்றுகிறார்.
“அறிவியல் பூங்கா” காலாண்டிதழை வெளியிட்டு வரும் அவர், 71 நூற்களின் ஆசிரியர். திருவள்ளுவர் அறிவுக் களஞ்சியம் வளர்ச்சி மையத்தை பூந்தண்டலம் கிராமத்தில் நிறுவி அந்தக் கிராம மேம்பாண்டிற்குத் தொடர்ந்து சேவை செய்து வருகிறார். தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது, கலைமாமணி விருதுகளுடன் 65 க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளளார். ஆஸ்திரேலியா வருகை தந்துள்ள முனைவர் சேயோன் அவர்களை SBS ஒலிப்பதிவுகூடத்தில் சந்தித்து உரையாடுகிறார்: றைசெல்.
நேர்முகம்: பாகம் 1
நேர்முகம் - பாகம் 2:https://www.sbs.com.au/language/tamil/ta/podcast-episode/interview-with-dr-cheyon-part-2/e6vykydto
——————————————————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




