உலக உயிரியல் விஞ்ஞானிகளில் ஆயிரத்தில் ஒருவர்!

Fr.Savarimuthu Ignacimuthu

Source: Fr.Savarimuthu Ignacimuthu

உலகின் உயிரியல் விஞ்ஞானிகளில் சுமார் ஒரு லட்சம் பேரில் முதல் ஆயிரம்பேரில் ஒருவராக சர்வதேச ஆய்வு வழி அடையாளம் காணப்பட்டுள்ளவர் முனைவர் சவரிமுத்து இஞ்ஞாசிமுத்து அவர்கள். தமிழ்நாட்டின் இயேசுசபையைச் சார்ந்தவர் கிறிஸ்தவ குரு அருட்திரு. இஞ்ஞாசிமுத்து அவர்கள். தமிழ்நாட்டின் பிரபல கல்வி நிறுவனங்களான பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் எனும் பல்கலைக்கழகங்களில் தலைமை பதவியான உபவேந்தராக (Vice Chancellor) பணியாற்றிய பிரபல கல்வியாளர். 800க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள், 80 க்கும் மேற்பட்ட நூற்கள், நூற்றுக்கும் மேற்படட முனைவர் படம் பெரும் மாணவர்களை வழி நடத்தல் எனும் பெரும் கல்விப்பணி செய்தவர் அருட்திரு. இஞ்ஞாசிமுத்து அவர்கள். இப்படியான பல தகமைகளைக்கொண்ட உயிரியல் விஞ்ஞானி முனைவர் சவரிமுத்து இஞ்ஞாசிமுத்து அவர்களை சந்தித்து உரையாடுகிறார்: றைசெல். பாகம் 1.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now