“முழு எழுத்துப்பணி செய்து தமிழ்நாட்டில் வாழ இயலாது”

Source: “Kulachal” Mu.Yoosuf
தமிழ் எழுத்து ஆளுமைகளில் ஒருவரான குளச்சல் யூசுப் அவர்களின் மொழிபெயர்ப்பு நூலுக்கு இலக்கிய துறையின் மிக உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படுள்ளது. மலையாள நாவலான மணியன் பிள்ளையுட ஆத்ம கதா என்ற நாவலை தமிழில் `திருடன் மணியன்பிள்ளை’ என மொழி பெயர்த்தமைக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக நூல்களைப் படைத்து வரும் குளச்சல் யூசுப், இதுவரை 32 நூல்களைப் படைத்துள்ளார். மேலும், இவரது படைப்புகளை கௌரவிக்கும் விதமாக 10-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இலக்கிய ஆளுமையான குளச்சல் யூசுப் அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.
Share


