மண்ணின் மணம் மறைந்தது

Source: Raj
மண்ணின் மணத்துடன் எழுதும் பிரபல தமிழ் எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான மேலாண்மை பொன்னுச்சாமி உடல்நலக் குறைவால் கடந்த திங்கள் (30 அக்டோபர் 2017) காலமானார். அவருக்கு வயது 66. எழுத்தாளர் என்பதற்கான எந்த பிம்பங்களும் இல்லாத எளிமையான, வெள்ளந்தி மனிதராக, தன் எழுத்து தந்திருக்கும் எந்தப் புகழ் மகுடத்தையும் தலையில் ஏற்றிக்கொள்ளாத மனிதராக வாழ்ந்தவர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள். அவர் சாகித்ய அகாடமி விருது பெற்ற 2008 ஆம் ஆண்டு நமக்கு வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு. அவரிடம் உரையாடியவர்: றைசெல்.
Share



