தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் இயங்கும் சக்தி நாட்டுப்புற கலாச்சார குழு, தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை கற்றுத்தரும் அமைப்பு. இந்த அமைப்பின் பெண்கள் இசைக்கும் பறை சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒன்று. தலித் மக்களுக்கு, குறிப்பாக தலித் பெண்களின் சமூக, கலாச்சரா, பொருளாதார விடுதலைக்காக சக்தி நாட்டுப்புற கலாச்சார குழு வழியாக கிறிஸ்தவ கன்னிகை அருட்சகோதரி சந்திரா மற்றும் அருட்சகோதரி பெல்சி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். “புனித வெள்ளி” சிறப்பு நிகழ்ச்சிக்காக அவர்களை சந்தித்து உரையாடுகிறார் றைசெல். முதல் பாகத்தில் அருட்சகோதரி சந்திரா ICM அவர்கள் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





