அம்பி என்றொரு தமிழ்க்கவி ஆளுமை

Source: SBS Tamil
அம்பி அவர்களை அறியாதவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு புதியவர்கள். அம்பி அவர்கள் ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு செய்த பங்களிப்பு மிகப் பெரிது. அவர் பெற்ற விருதுகளும், பாராட்டுகளும் ஏராளம். குறிப்பாக, இரண்டாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 'அண்ணா பதக்கத்திற்காக' கவிதைப்போட்டி நடைபெற்று எம்ஜிஆர் அவர்கள் தங்கப்பதக்கம் அளித்த பத்து கவிஞர்களில் அம்பி அவர்களும் ஒருவர். அம்பி அவர்கள் 10 கவிதை நூற்கள், கிரீன் அவர்களைப்பற்றி மூன்று நூற்கள் என்று நூற்களைப் படைத்த படைப்பாளி. 30 ஆண்டுகள் ஆசிரியப்பணி, பின்னர் பாடவிதான எழுத்தாளர் என்று அவரின் பணி விரிகிறது. தனது 90 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் அம்பி அவர்களை SBS தமிழ் ஒலிபரப்பு வாழ்த்தும் வகையில் கவிஞர் அம்பி அவர்கள் SBS தமிழ் ஒலிபரப்பிற்க்கு 2015 ஆம் ஆண்டு வழங்கிய நேர்முகத்தை மீண்டும் ஒலியேற்றுகிறோம். கவிஞர் அம்பி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடியவர்: றைசெல்.
Share



