நாட்டில் 80% பேர் தடுப்பூசி போட்டுவிட்டால் எல்லைகளைத்த திறக்கலாம்; சர்வதேசபயணங்கள் சாத்தியப்படலாம் என்று NSW & விக்டோரிய மாநில அரசுகள் கருதுகின்றன. ஆனால் இப்படியான முடிவுக்கு உடனடி வருவதற்கு குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய மாநில அரசுகள் தயங்குகின்றன. இந்த மாநிலங்களில் வாழும் நம்மவரக்ள் என்ன நினைக்கின்றனர்? இந்த விவாதத்தில் இதில் கலந்துகொண்டவர்கள் பெர்த் நகரிலிருந்து துறை கார்த்திக் (மேல் இடது), பிரிஸ்பேன் நகரிலிருந்து ஜாஸ்மின் சுபாஷினி (மேல் வலது), சிட்னி நகரிலிருந்து கார்த்திகேயன் ராமநாதன் (கீழ் வலது), மெல்பன் நகரிலிருந்து காஞ்சனா செந்தூரன் (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




