சர்வதேச எல்லைகள் நாளை முதல் (1 நவம்பர்) திறக்கப்படுவதாக பெடரல் அரசு அறிவித்துள்ளது. ஆனால் சர்வதேச எல்லைகள் அனைத்து மாநிலங்களிலும் நாளை திறக்கப்படபோவதில்லை என்பதே உண்மை. இப்படி சர்வதேச எல்லைகள், மாநிலங்களுக்கிடையிலான எல்லைகள் என்று பயணம் குறித்த கொள்கைகளில் ஒவ்வொரு மாநிலமும் அல்லது பிராந்தியமும் மாறுபடுகின்றன. இது சரிதான் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா அல்லது நாடு முழுவதும் ஒருமித்த கொள்கை கடைபிடிக்கப்படவேண்டும் என்று நினைக்கின்றீர்களா? “வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் ஒலித்த கருத்துக்களின் தொகுப்பு. சிறப்பு விருந்தினர்: அம்பலவாணபிள்ளை நிர்மலதாஷ் அவர்கள். மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தில் Electrical மற்றும் Electronic Engineering துறை பேராசிரியராகவும் மற்றைய தலைமைத்துவப்பதவியிலும் பணியாற்றிவருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





